Friday, 7 December 2012

உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் (Does India concerns on Nuclear Safety?)


மின் ஆக்கத்திற்கு அணு விசையைப் பயன்படுத்துவதன் பெயரால் அணு உலைகள் அமைப்பது பற்றிய விவாதம் தொடர்கிறது. இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம், அணு உலை ஆக்கக் குழுமங்களோடு இந்திய அரசின் வணிக பேரம், அணு விபத்து இழப்பீட்டுச் சட்ட முன்வடிவு, மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டம் செய்தாபூரில் புதிய அணு உலை நிறுவ எடுத்து வரும் முயற்சி... இவையாவும் அணுவிசைத் தொடர்பான விவாதத்தை தூண்டித் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால் இந்திய அரசு தன் அனுவிசைத் திட்டத்தைக் கிஞ்சிற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை.
உலக அளவிலும், அணுவிசை தொடர்பான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1993ஆம் ஆண்டு அமெரிக்காவில் மூன்று மைல் தீவிலும், 1986இல் சோவியத் நாட்டில் செர்னோபிளிலும் நேரிட்ட கொடிய விபத்துக்கள் அணு உலையின் ஆபத்தைச் சுட்டுவதாய்க் கருதப்பட்டது. இந்த விபத்துக்களுக்குப் பிறகும் இவற்றைக் காட்டிலும் சற்றே குறைந்த அழிவை ஏற்படுத்திய நூற்றுக்கணக்கான பிற விபத்துகளுக்குப் பிறகும் அணுவிசை வழி மின்னாக்கத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. இவற்றால் மனித உயிர்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து விடுக்கப்படும் எச்சரிக்கைகளை அணு உலையாக்கம் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் குழுமங்களோ, அரசுகளோ, இதுவரை பொருட்படுத்தவில்லை. அண்மையில் சப்பானில் நிகழ்ந்த நில நடுக்கமும், அதன் விளைவாக எழுந்த ஆழிப் பேரலையும், அந்நாட்டிற்கு பேரழிவு உண்டாக்கி இருப்பதோடு அணு உலைகள் பல வெடித்துச் சிதறவும் காரணமாயிற்று.
நீர் கொண்டு நெருப்பை அணைப்பதுதான் வாடிக்கை. அங்கே நிலத்தில் பிறந்த சீற்றம் நீருக்குத் தாவி நெருப்பாய்ப் படர்ந்து ஊழிப் பேரழிவை தோற்றுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணு உலைகளால் நேரிடக் கூடிய ஆபத்து பற்றிய விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சப்பான் நாட்டில் புகுசிமா அணுவிசை நிறுவனத்தில் இதுவரை மூன்று அணு உலைகள் வெடித்துச் சிதறியுள்ளது. மேலும் சில அணு உலைகளும் வெடித்துச் சிதறுகிற அல்லது உருகிக் கலைகிற ஆபத்தில் உள்ளன. இந்த அணுமின் நிறுவனத்தை நடத்தி வரும் டோக்கியோ மின் விசைக் குழுமம் (டெப்கோ) என்ற தனியார் நிறுவனம் அணு உலைகளின் பாதுகாப்புக் குறித்து இதுகாறும் சொல்லி வந்த செய்திகளில் முழு உண்மை இல்லை என்பது இப்போது தெளிவாகிற்று.
புகுசிமா அணுவிசை நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள அணு உலை வெடிப்பினால் பெரும் அணுக் கதிர்வீச்சு தோன்றியுள்ளது. சுமார் நான்கு இலக்கம் மக்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அணு உலை வெடித்ததால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையால் அம்மக்களை கொடுங்குளிர் வாட்டியெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நில நடுக்கத்தாலும், ஆழிப் பேரலையாலும் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பிழைத்து உயிர் வாழ்வோரும் அணுக் கதிர்வீச்சின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஓடி ஒளிய வேண்டிய நிலை!
சப்பானில் மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளிலும் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை பற்றி தனியார் குழுமங்களும், அரசுகளும் அளித்து வந்த உறுதிகளைப் புகுசிமா அணு உலை வெடிப்பு பொய்யாக்கிவிட்டது. மூன்று மைல் தீவு, செர்னோபிள், இப்போது புகுசிமா... இவையே போதும் அணு உலைகள் இனி நமக்கு தேவையில்லை என்று உலகம் முடிவெடுப்பதற்கு!
புதிய உலைகள் திறப்பதை நிறுத்த வேண்டும். பழைய உலைகளைப் பாதுகாப்பான முறையில் கலைத்து விட வேண்டும். அடுத்த பெருநேர்ச்சிக்காகக் காத்திருக்கத்....... தேவையில்லை.
அறிவியல் தொழில்நுட்பத்தில் வெகுவாக மேம்பட்ட நிலையில் இருக்கும் சப்பானிலும் மேலை நாடுகளிலும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்றால் இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் எப்படி பாதுகாப்பானவையாக இருக்க முடியும். அறிவியல் தொழில்நுட்பத்தில் பின் தங்கிய நிலை மட்டுமல்ல, ஊழல் மலிந்த அரசியல் தலைமையின் அதிகார வர்க்கமும் சேர்ந்து அணு உலை ஆபத்தைப் பன்மடங்காக்கி விடுகின்றன.
அண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பாக அம்பலப்பட்ட ஊழலை மறந்துவிட வேண்டாம். அறிவியலர் அறவியலராகவும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.
சப்பானில் வெடித்துச் சிதறிய அணு உலைகளின் தொழில்நுட்பம் வேறு. இந்திய அணு உலைகளின் தொழில்நுட்பம் வேறு என்று இந்திய அணு விசைத் துறையினர் சிலர் வாதிடுகின்றனர். சப்பானில் ஏற்பட்ட விபத்துக்கும் அணு உலைத் தொழில் நுட்பத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் மறந்துவிட்டனர். நில நடுக்கத்தாலும ஆழிப் பேரலையாலும் மரபு சார் குளிரூட்டிப் பொறியமைவுகள் செயல் இழந்து, அதனால் அணு உலைகளின் வெப்பம் உயர்ந்ததுதான் அணு உலை வெடிப்புக்குக் காரணமாயிற்று. இதற்கும் அணு உலைத் தொழில்நுட்பத்திற்கும் என்ன தொடர்பு? நில நடுக்கம், ஆழிப் பேரலை போன்ற பேரிடர்கள் சப்பானில்தான் நிகழும் இந்தியாவில் ஒருபோதும் நிகழ மாட்டா என்று உறுதியளிக்க யாரால் முடியும்?
அணு உலை இயக்கம் என்பது அணுப் பிளவு அல்லது அணு விணைவு வழியாக கிடைக்கும் ஆற்றலை மின்விசையாக மாற்றும் தொழில்நுட்பம் தொடர்பானது மட்டுமல்ல. இதில் வேண்டுமானால் சப்பானுக்கும், இந்தியாவுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அணு உலைக் கழிவுகள், அவற்றிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு... இவற்றில் எல்லா நாடுகளும் ஒன்றே! அணுக்கழிவுகளை ஆபத்தில்லாத முறையில் அழித்துத் தீர்வு காண்பதற்கு இதுவரை எந்த நாடும் உருப்படியான வழி காணவில்லை என்பதே உண்மை.
அணு உலைக் கழிவுகளில் இருந்து ஆனாலும், அணு உலை வெடிப்பிலிருந்து ஆனாலும் ஏற்படக் கூடிய கதிர்வீச்சின் ஆபத்து என்பது சப்பான், ருசியா, அமெரிக்கா, இந்தியா எல்லா நாடுகளுக்கும் ஒன்றுதான். இந்தியாவில் மொத்த மின்னாக்கத்தில் இரண்டு விழுக்காடுதான் அணு உலைகளிலிருந்து பெறப்படும் எனப்படுகிறது. தங்களுக்கு வேண்டிய மின்னாற்றலில் ஒரு பங்கை மின் உலைகளிலிருந்து எடுக்கக் கூடிய மேலை நாடுகள் உண்டு. இந்த நாடுகளையெல்லாம் புகுசிமா அணு உலை வெடிப்புகள் விழிக்கச் செய்துள்ளன. சற்றே நின்று இது தேவைதானா என்று எண்ணிப் பார்க்கச் செய்துள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய அளவில் வணிக முறையில் அணு மின்னாக்கம் செய்யும் அமெரிக்க நாட்டில் அணு உலைகளுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வெர்மான்ட் என்ற இடத்திலிருக்கும் அணு உலை புகுசிமாவில் வெடித்துச் சிதறிய முதல் உலையை ஒத்ததாகும். அமெரிக்காவில் இதே வகைப்பட்ட தர அணு உலைகள் உள்ளன. வெர்மான்ட் அணு உலையை வடிவமைத்துக் கட்டிக் கொடுத்தது 'செனரல் எலெக்ட்ரிக்' என்னும் பன்னாட்டுக் குழுமம். இப்போது வெர்மான்ட் ஆளுநர் பீட்டர் சம்லின் உட்பட அம்மாநில மக்களில் பெரும்பான்மையினர் அங்குள்ள அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்கிறார்கள்.
சப்பானிய அணு நேர்ச்சி உலக மெங்கும் எதிர்வினைகளைக் கிளறியுள்ளது. அய்ரோப்பா எங்கிலும் கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினராயிருக்கும் பிரெஞ்சுக்காரர் ஈவாசோலி அணுவிசை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் இப்படிச் சொன்னார்: "அணு உலைகளை எப்படித் துறப்பது என்பதை நாம் அறிவோம். நமக்கு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் தேவை, காற்றாலைகள் தேவை, புவி வெப்ப ஆற்றல் தேவை, சூரிய வெப்ப ஆற்றல் தேவை".
சுவிட்சர்லாந்து அரசு தன் அணு உலைகளுக்கு மறு உரிமம் வழங்கும் திட்டங்களை நிறுத்தியுள்ளது. செர்மானிய நகரம் இசுட்டக்கார்ட்டில் 10,000 மக்கள் திரண்டு அணு உலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் 1980க்கு உட்பட்ட 7 அணு உலைகளை உடனே மூட ஆணையிட்டார்.
அமெரிக்காவில் மசாக்சுசெட்சு நாடாளுமன்ற உறுப்பினர், சனநாயகக் கட்சியைச் சேர்ந்த எடுமார்க்கே கூறினார்: "சப்பானில் இப்போது நிகழ்வதைப் பார்க்கும் போது இங்கும் அணு மின்னாக்க ஆலையில் கொடிய விபத்து நேரிட முடியும் எனத் தெரிகிறது. எதில்தான் விபத்து இல்லை? வான் பயணத்தில் விபத்து நேரிடுவதால் வானூர்திகளே தேவையில்லை என்று சொல்லிவிட முடியுமா? பார்க்கப் போனால் வானூர்தி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் தொகையோடு ஒப்பிட்டால் அணு உலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் தொகை சொற்பமே".
அணு விசைக்குச் சப்பை கட்டுவோரின் மற்றொரு வாதம் இது. அணு உலைகளின் ஆபத்து என்பது விபத்துகளில் உயிரிழப்போர் தொகையோடு முடிந்துவிடக் கூடியதன்று. அணுக் கழிவுகளின் கதிர்வீச்சு ஒரு நிரந்தரச் சிக்கலாய் நீடிப்பதோடு, உலை வெடிப்புகளாலும் நேரிடும் கதிரியக்கத்தின் தீய விளைவுகள் அந்நேரத்தோடும், அவ்விடத்தோடும் முடிந்து போகிறவை அல்ல. வானூர்தி விபத்துகள் போன்ற பிற நேர்ச்சிகளுக்கும் அணு உலை வெடிப்புகளுக்கும் இடையிலான இந்த வேறுபாடு மிக முக்கியமானது.
அணு விசையின் அழிவாற்றல் காலத்திலும் இடத்திலும் நீண்டு விரிந்து செல்வதை மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் உண்டு. இதே சப்பான் நாட்டில் கிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்க வல்லாதிக்கம் வீசிய அணு குண்டுகள் இலட்சக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்தன என்பதோடு அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் உருச்சிதைந்த குழந்தைகள், உலகமறிந்திராத புதுப்புது நோய்களுக்கு ஆளான ஆண்கள், பெண்கள் ஏராளம், ஏராளம். அணு குண்டுகளின் அதே கொடிய விளைவுகளை இன்னும் கூட பெரிய அளவில் அணு உலை வெடிப்புகளால் ஏற்படுத்த முடியும். உண்மையிலேயே புகுசிமாவின் விளைவு அப்படித்தான் இருக்குமோ என்று உலகம் அஞ்சிக் கொண்டிருக்கிறது.
விபத்து நேரிடும் வாய்ப்பே இல்லாத, முழுக்க முழுக்க பாதுகாப்பான அணு உலை என்பதாக ஒன்று இல்லை, இருக்கவும் முடியாது. அணுக் கொள்கை தொடர்பான ஓர் அமைப்பின் தலைவர் டேனியல் கிர்ட்சு இப்படிக் கூறினார்: "ஆபத்தில்லாத ஒரே அணு உலை நம்மிடமிருந்து ஒன்பது கோடி மைல் தொலைவில் உள்ளது. அதன் பெயர் சூரியன்".
அணு உலைகளின் துணையின்றி நம் மின் தேவையை நிறைவு செய்ய முடியாது என்று தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் போன்றவர்கள் புழுகி வருவதை நம்பிவிடக் கூடாது. நாட்டில் காணப்படும் மின் பற்றாக் குறைக்கான உண்மைக் காரணங்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்பி பன்னாட்டுக் குழுமங்களின் அணு உலை வணிகத்தை வளர்க்கும் உத்தியே இது. அணு மின்னாக்கம் என்பது இக்குழுமங்கள் குறைந்த முதலீட்டில் கொள்ளை இலாபமடிக்க வழி செய்வதை மறந்துவிடக் கூடாது.
இந்திய வல்லாதிக்க அரசைப் பொறுத்தவரை அதன் அணு விசை மோகத்திற்குத் தூபமிடுவது அணு ஆயுத குவிப்பு வெறியே என்பதை மறந்துவிடக் கூடாது. அணு விசைப் பயன்பாட்டில் அமைதி வழியையும் ஆயுத வழியையும் வேறுபடுத்திப் பிரிக்க இயலாது. அமைதி வழி அணுவாற்றல் என்ற ஒன்றே இல்லை. அணு விசை ஆக்கம் என்பது அணு குண்டுகளுக்குத் தரப்படும் ஊக்கமே தவிர வேறல்ல.
இந்திய மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் வேட்டைக்கு இந்திய அரசு துணை போவதைப் போபால் நச்சுவாயு படுகொலை நிகழ்வில் பார்த்தோம். இராசீவ் காந்தி தொடங்கி அத்தனை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொலைகாரனைப் பாதுகாப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களை வஞ்சிப்பதிலும் முனைந்து செயல்படக் கண்டோம்.
அணுவிசை பாதுகாப்பானது என்று ஆற்றுப்படுத்துகிற இதே அரசுதான், அணு விபத்து இழப்பீட்டு சட்ட முன்வடிவை இயற்ற முன்வந்தது. விபத்துகளுக்கு வாய்ப்பில்லை என்றால் இழப்பீடும், அந்த உச்சவரம்பும் ஏன்? பெரிய இழப்பீடெல்லாம் நாங்கள் தரமுடியாது என்று அணு உலைப் பெருங் குழுமங்கள் நிபந்தனை விதிப்பது ஏன்?
சுருங்கச் சொன்னால் அணு உலைகளோடு வாழ்வது என்பது மடியில் அணுகுண்டைக் கட்டிக்கொண்டு இருப்பதற்கு நிகரானது. உடனே இதற்கு முடிவுகட்டியாக வேண்டும். இந்தியாவெங்கும் இருபது அணு உலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை உடனே இழுத்து மூட வேண்டும். புதிய அணு உலை ஒப்பந்தங்களை கைவிட வேண்டும். இதனால் மின் பற்றாக்குறை ஏற்படுமென்றால் ஏற்படட்டும். இவை இருந்தும் பற்றாக்குறைதான், இல்லாமலும் பற்றாக்குறைதான் என்னும் போது இரண்டாவதே மேல். ஆபத்து இல்லாத வேறு வழியில் இந்த பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்னைக்கு அருகில் உள்ளது. இப்போது சப்பானில் நேரிட்டது போல் 2004இல் நாம் சந்தித்த அந்த ஆழிப்பேரலை ஒரு கெடு வாய்ப்பாகக் கல்ப்பாக்கம் அணு உலையை பாதித்திருக்குமானால், அதன் விளைவுகளை எண்ணிப் பார்க்கவே நடுக்கமாய் உள்ளது. மக்கள் அடர்ந்து செறிந்து வாழும் சென்னைப் பெருநகரத்தில் அணுக் கதிர்வீச்சு பரவினால் என்ன ஆகும்?
கல்ப்பாக்கம் போதாதென்று கூடங்குளத்திலும் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்குள் அங்கே ஆயிரம் மெகாவாட் அணு உலை இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலை கட்டும் பணியும் நிறைவுறும் நிலையில் உள்ளது. கூடங்குளத்தால் ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து முன்பே தமிழ்த் தேசம் இதழில் (பங்குனி 2007) தோழர் கதிர்நிலவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.
உயிருக்கு உலை வைக்கும் அணு உலையை ஒருபோதும் நம் தமிழக மண்ணில் இடம் பெறவிடோம் என்று கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். சப்பானில் நிகழ்ந்திருப்பதை நமக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அணு உலைகளில் இருந்து நம் மண்ணையும், நம் மக்களையும் விடுவிப்பதற்காகப் போராடுவோம். அது உலக மக்கள் நலனுக்கு நாம் செய்யும் தொண்டாக அமையும்.

மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? (International Women's Day 2012)


International Women's Day 2012 - Tamil Katturaikal - General Articles
மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். முதலில் அனைத்து மகளிருக்கும் கூடலின் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்ச் 8-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8-ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!
கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.
இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.
இந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.
எது எப்படி இருந்தாலும், வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை.
அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.
இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.
இதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 91 ஆண்டுகளுக்கு முன்பு 1921-ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்த தினம் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாலின சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உலகை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும். மேலும், அனைத்து வகையிலும் பெண்களின் முன்னேற்றம் என்ற இலக்கை அடைவதில் நாம் கண்டுள்ள வெற்றிகளைக் கொண்டாட வேண்டிய தினமும் ஆகும் இது. அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நாட்டின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடுங்கள்.

மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? (International Women's Day 2012)


International Women's Day 2012 - Tamil Katturaikal - General Articles
மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். முதலில் அனைத்து மகளிருக்கும் கூடலின் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்ச் 8-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8-ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!
கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.
இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.
இந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.
எது எப்படி இருந்தாலும், வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை.
அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.
இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.
இதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 91 ஆண்டுகளுக்கு முன்பு 1921-ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்த தினம் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாலின சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உலகை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும். மேலும், அனைத்து வகையிலும் பெண்களின் முன்னேற்றம் என்ற இலக்கை அடைவதில் நாம் கண்டுள்ள வெற்றிகளைக் கொண்டாட வேண்டிய தினமும் ஆகும் இது. அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நாட்டின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடுங்கள்.

மாற்றுத்திறனாளிகளின் பயணங்கள் குறித்து சிந்திக்குமா இந்தியா? (Will India implement UNCRPD?)


Will India implement UNCRPD? - Tamil Katturaikal - General Articlesகடந்த மார்ச் 6-ம் நாள் வெளியான தி இந்து பத்திரிகையின் முதல் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்பது போன்ற செய்தி வெளியானது. மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகமானது 'மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் கடத்துகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியில் ஆபத்தான பொருட்களை மறைத்து எடுத்துச் செல்கின்றனர்' என்று குற்றம் சாட்டுகின்றது. மாற்றுத்திறனாளிகள் அவர்களது சொந்த சக்கர நாற்காலியைப் பயன்படுத்தக் கூடாது, விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் வழங்கும் சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதி இருக்கிறது என்று வாதிடுகின்றனர். அவர்களிடம் சில கேள்விகள்:
1. இதுவரை எத்தனை முறை மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் கடத்தியுள்ளனர் என்று கூற முடியுமா?
2. கடந்த காலத்தில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இவ்வகையான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளார்கள்?
3. சர்வதேச அளவில் எத்தனை முறை மாற்றுத்திறனாளிகள் இவ்வகையான குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளை அளிக்க முடியுமா?
இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில் மாற்றுத்திறனாளிகள் மேல் குற்றம் சுமத்துபவர்களிடம் இருக்காது. தற்பொழுதுதான் மாற்றுத்திறனாளிகள் தங்களது அறிவின் துணை கொண்டு, ஆற்றலுடன் சமூக அவலங்களைத் தாண்டி உடற் குறைகளை பொருட்படுத்தாது, உழைத்து வாழ்வில் முன்னேறி வருகின்றனர். அவர்களில் விமானப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட தற்பொழுது அதிகரித்துள்ளது என்பது உண்மை. ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மிக மிக அதிகமானது. கம்பிக் கால்களை அணிந்து கொண்டு கைகளில் கோல்களை ஊன்றிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடந்து விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.
உலோகங்களைக் கண்டறியும் கருவிகள் இவர்கள் அருகில் வந்தாலே ஒலி எழுப்புகின்றன. பலமுறை மாற்றுத்திறனாளிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளைக் களையச் சொல்லி உள்ளாடைகளுடன் நிறுத்தும் கொடுமைகள் பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் அரங்கேறி வருகின்றன. இவ்வகையான சோதனைகள் எல்லாம் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களுக்குக் கிடையாது. (மத்திய அமைச்சர் ஜெயப்பால் ரெட்டி அவர்களை இவ்வாறு சோதனை செய்ய முற்படுமா மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம்?) மாற்றுத்திறனாளிகளின் தன்மானத்திற்கு எதிரான இவ்வாறான போக்குகள் அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கின்றன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் எனது நெருங்கிய தோழர் ஒருவருடன் பயணம் செய்த மாற்றுத்திறனாளி ஒருவரை மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் உள்ளாடைகளுடன் நிறுத்தி சோதனை செய்ததைக் கூறி மிகவும் வருத்தப்பட்டார். தனது வாழ்நாளில் தான் மிகவும் கொதித்து கோபப்பட்டு அந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறினார். மாற்றுத்திறனாளிகள் பல இடஙகளில் இது போன்று அதிகார வர்கத்தினரால் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கொல்கத்தாவில் ஜீஜா கோக் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியையை ஸ்பைஸ் ஜெட் என்ற தனியார் நிறுவன விமான ஓட்டி, விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்துவிட்டார். இவர்களைப் போன்றவர்கள் விமானத்தில் பயணம் செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறி அந்த ஆசிரியையை இறக்கிவிட்டுவிட்டார். அந்த ஆசிரியை பலமுறை உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர். ஆனாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்றே சென்னையைச் சேர்ந்த டாக்டர்.தீபக் என்பவரை சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்ற மறுத்த செய்தி சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. தொடர்ந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக இவ்வாறான செய்திகள் மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளை வெளிக் கொணர்வதாக இருக்கின்றது. மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள், அவர்களின் சமூக வாழ்வுரிமைகள் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எனது தோழர் ஒருவர் கூறிய ஒரு சம்பவம். மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவருக்கு விமானத்தின் பின் பகுதியில் (வால் பகுதியில்) 29சி என்ற எண் கொண்ட இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. (விமானத்தின் வால் பகுதியில் சிவப்பு நிறத்தில் இருக்கைகள் குறிக்கப்பட்டுள்ளது) பல பெரிய விமானங்களில் முன்புறமும் பின்புறமும் ஏணிகள் இணைக்கப்பட்டு விமானத்தினுள் பயணிகள் ஏறும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த விமானமானது, பயணிகளை விமானப் பாலத்தின் ஊடாக ஏற்றவும் இறக்கவும் வழி வகை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறாக விமானத்தின் முன்புறத்தை பாலத்துடன் இணைத்து பயணிகளை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இரண்டு கால்களும் செயல் இழந்த அந்தப் பெண் ஊன்றுகோல்களின் உதவியுடன் விமானத்திற்குள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் சென்றால் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் இருக்கையானது விமானத்தின் மறுகோடியில் உள்ளது. மிகவும் குறுகலான அந்த இடைவெளியில் தனது ஊன்று கோல்களுடன் அந்தப் பெண் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தை அடைவது என்பது மிகவும் கடினமானது. எனது தோழர் விமான அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.
விமானப் போக்குவரத்து நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த இருக்கைதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது- நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருக்கின்றனர். அவ்வாறான இருக்கையை அடைவதற்கு அவருக்கு ஏணி வசதிகள், அல்லது லிப்ட் வசதி செய்து தரப்பட்டிருந்தால் மட்டுமே அவர் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 29சி என்ற இருக்கையை அடைய முடியும். அவ்வாறு நீங்கள் செய்து தரவில்லை, எனவே விமானத்தின் முன் இருக்கையை அவருக்கு ஒதுக்கிக் கொடுங்கள் என்று பலவிதங்களில் எடுத்துக் கூறி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளியின் உரிமைக்குப் போராடும் தோழரின் கடுமையான வாக்குவாதங்களால் வேறு வழியில்லாமல் இடம் ஒதுக்கித் தரப்பட்டது என்பதை நினைவில் வைக்க வேண்டும். அவ்வாறான ஒரு போராட்டம் இல்லையென்றால் அந்த மாற்றுத்திறனாளிப் பெண் அனுபவித்திருக்கும் கொடுமைகளுக்கு யாராலும், எந்த வார்த்தைகளாலும் ஆறுதல் சொல்ல இயலாது.
சென்னையைச் சேர்ந்த திரு.தீபக் அவர்கள் அமெரிக்கா சென்ற பொழுது அவர் இரண்டு ஊன்றுகோல்களுடன் விமானத்தில் இருந்து எழுந்தவுடன் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறப்பு மின் தூக்கி உதவியுடன் அவர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். அவர் நான்கு சக்கர வாகனத்தில் ஏறி விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதுவரை விமான நிலைய ஊழியர்கள் உதவினார்கள் என்பதை ஒரு முறை நினைவு கூர்ந்தார். அனைத்து விஷயங்களுக்கும் அமெரிக்காவை அடியொற்றி நடக்கும் இந்திய நாடும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மனித உரிமையாகக் கருதி பணியாற்றிடலாமே. 1986-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அவர்கள் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார் (U.S. Air Carrier Access Act 1986) அச்சட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவந்த அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தன. இது போன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசால் நிறைவேற்ற இயலாதா?
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் United Nations Convention on Rights of Persons with Disabilities (U.N.C.R.P.D.) அக்டோபர் 1-ம் தேதி 2007-ம் ஆண்டு கைச்சாத்திட்டது. அத்துடன் அதை மறந்தும் போய்விட்டது. சின்னஞ் சிறிய நாடான மலேசியா மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தத்தக்க வகையில் தனது விமான நிலையங்களையும், விமானத்தில் பயணிகள் பயன்படுத்தும் பாதையையும், சிறப்பு மின் தூக்கிகளையும் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான சிரமங்களும் இன்றி விமானங்களில் பயணித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் மக்கள் தொகையில் உலகில் முதல் நாடான இந்தியா அவர்களைப் பற்றி எப்பொழுது சிந்திக்கும்? எமது பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்காது மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்கள் கடத்துகின்றனர், வெடிப் பொருட்களை அவர்களது சக்கர நாற்காலிகளினூடாக கடத்துகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது வேதனையாக இருக்கின்றது.